நண்பர்களே !மாதம் 9ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈஸியா

Wednesday, July 25, 2012

சவாரி பிடிப்பதில் தகராறு: ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை

சீர்காழி, ஜுலை. 23-

சீர்காழி அருகே உள்ள இரணியன் நகரில் வசித்தவர் சீனிவாசன் (40). சீர்காழி மாரியம்மன் கோவில் தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் சிவாஜி ராவ். இருவரும் ஆட்டோ டிரைவர்கள். கொள்ளிடம் முக்கூட்டில் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வந்தனர்.

சீனிவாசன் ஏற்கனவே நெஞ்சு வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சீனிவாசனுக்கும், சிவாஜிராவிற்கும் சீர்காழி ரெயில் நிலையத்தில் சவாரி பிடிப்பது சம்பந்தமாக மோதல் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சிவாஜி ராவ், சீனிவாசனை நெஞ்சில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் வலியோடு சீனிவாசன் வீட்டிற்கு சென்றார். தனது மனைவி கவிதாவிடம் நடந்த சம்பவம் குறித்து கூறினார். வீட்டிற்கு சென்ற சீனிவாசனுக்கு நெஞ்சு வலி அதிகரித்ததை தொடர்ந்து சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சீனிவாசன் மனைவி கவிதா சீர்காழி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் - இன்ஸ்பெக்டர்கள் பன்னீர் செல்வம், சுரேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சிவாஜிராவை கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட சீனிவாசனுக்கு விஷ்வா (9), நிதிஷ்குமார் (7) ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளன.

No comments:

Post a Comment