நண்பர்களே !மாதம் 9ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈஸியா

Thursday, August 23, 2012

சீர்காழியில் கட்டி முடிக்கப்பட்ட தமிழிசை மூவர் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படுமா?

சீர்காழியில் பிறந்து வளர்ந்து உலகெங்கும் தமிழிசையை வளர்த்த தமிழிசை மூவர்களான முத்துதாண்டவர், அருணாச்சலகவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகியோரின் நினைவுகளை போற்றும் வகையில் சீர்காழி தாசில்தார் அலுவலகம் எதிரில் ரூ 1 கோடியே 51 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்ட கடந்த ஆட்சியில் உத்தரவிடப்பட்டு 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மணிமண்டபம் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது.
 
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனி கவனத்தில் வித்திட்ட இந்த மணிமண்டபத்தை அப்போதைய செய்திதுறை அமைச்சர் பரிதிஇளம்வழுதி பல்வேறு வகையான கலை யுக்திகளை கையாண்டார். அதன் தொடர்ச்சியாக மணி மண்டபத்தில் வைப்பதற்காக கலை நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்ட தமிழிசை மூவர்களான முத்துதாண்டவர், அருணாச்சலகவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகியோரின் ஐம்பொன் சிலைகள் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டது.
 
ஒவ்வொரு சிலையும் 500 கிலோ எடையில் பீடம் உட்பட ஆறேமுக்கால் அடி உயரம் கொண்ட ஜம்பொன் சிலைகளால் அலங்கரிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ 21 லட்சம் ஆகும். மேலும் மணிமண்டத்தின் முகப்பில் இருபக்கங்களிலும் பெரியளவிலான இரண்டு கல் யானைகளும் அதன் மேல் பண்ணும், பரதமும், விரலியார் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது.
 
ஆரம்ப கால கட்டத்தில் அசுர வேகத்தில் தொடங்கிய மணிமண்டபத்தின் சிற்ப வேலைகள் சற்று தாமதமாகவே நடந்து முடிக்கப்பட்டுள்ளது என தமிழ் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். திமுக ஆட்சி காலத்திலேயே மணிமண்டபம் கட்டி திறக்கப்பட வேண்டுமென்பது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு திட்டத்தில் ஓன்றாகும். அதன்படி சீர்காழியில் ஆண்டு தோறும் அரசு சார்பில் நடத்தப்படும் தமிழிசை மூவர் விழா கடந்த ஆண்டு புதிய மணிமண்டபத்தில் தலைசிறந்த கலைஞர்களை கொண்டு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால் இந்த மணிமண்டபம் காலதாமதாமாக பணிநிறைவு பெற்றும் திறப்பு விழா காணமுடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்களை மனவேதனை அடைய செய்துள்ளது. இது குறித்து தமிழ் ஆர்வலர் ஒருவர் கூறுகையில் : உலகெங்கும் தமிழிசையை வளர்த்த முத்துதாண்டவர், அருணாச்சலகவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகிய தமிழிசை மூவர்களுக்கு மணிமண்டபம் மாளிகை கட்டி திறப்பு விழா செய்யாமல் இருப்பது வருந்ததக்க விஷயமாகும்.
 
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பல்வேறு இன்னல்கள் பட்டு தமிழிசையை வளர்த்த மூவர்களுக்கும் மணிமண்டபம் அவசியமான ஓன்று. அவர்களின் நினைவு களை இந்த மண்டபத்தில் ஆண்டுதோறும் போற்றிப் பாடி உலகலவில் உயர்த்திட நாம் ஓற்றுமையுடன் இணைந்து செயலாற்றிட வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் சென்னை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலையை புதுப்பித்து சலவை கற்கள் அமைத்து சீரமைக்கவும், கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தை புனரமைக்கவும் பல லட்சம் நிதி ஓதுக்கீடு செய்துள்ளார்.
 
இதேபோல் சீர்காழியில் ரூ 1 கோடியே 51 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட தமிழிசை மூவர் மணிமண்டபத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றார்.

No comments:

Post a Comment