நண்பர்களே !மாதம் 9ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈஸியா

Thursday, August 23, 2012

ஈவ் டீசிங் செய்தால் கடும் நடவடிக்கை: சீர்காழி டி.எஸ்.பி. எச்சரிக்கை

சீர்காழியில் விவேகானந்தா மகளிர் கல்லூரியில் சீர்காழி காவல்துறை சார்பில் ராகிங்கை முற்றிலும் ஒழிக்கும் வகையில் புகார் பெட்டிகள் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
 
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். டி.எஸ்பி பாலகுரு,மகளிர் இன்ஸ்பெக்டர் சுகுணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் ஜெயந்தி கிருஷ்ணா வரவேற்று பேசினார். இதில் சீர்காழி டி.எஸ்.பி பாலகுரு புகார் பெட்டியை பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பேசியதாவது:-
 
இங்கு வைக்கப்படுள்ள புகார் பெட்டியை கல்லூரி மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.மாணவிகள் கல்லூரிக்கு வரும்போதோ அல்லது பஸ் நிலையத்திலோ, வீட்டுக்கு அருகாமையிலோ எதாவது அநீதி இழைக்கப்பட்டாலோ அல்லது ஆண்கள் கிண்டல், கேலி செய்து தொந்தரவு செய்தால் இந்த புகார் பெட்டியில் எழுதி போடலாம். புகார் தெரிவிப்பவர்கள் தாங்கள் விருப்பப்பட்டால் பெயர், முகவரியை புகாரில் தெரிவிக்கலாம்.
 
தாழ்வு மனப்பான்மையை விட்டு பெண்கள் தைரியமாக பேச முன் வரவேண்டும். இந்திய தண்டனை சட்டத்தில் 511 பிரிவுகள் உள்ளன.எல்லா குற்ற நடவடிக்கைக்கும் தண்டனைகள் உண்டு. ஈவ்டீசிங் செய்பவர்களுக்கு 3முதல் 5 ஆண்டுகள் வரை அபராதத்துடன் கடுங்காவல் தண்டனை வழங்க சட்டத்தில் உள்ளது.ஆகையால் ராகிங்,டீசிங் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 
இவ்வாறு அவர் பேசினார்.
 
இதில் கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment