நண்பர்களே !மாதம் 9ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈஸியா

Thursday, August 23, 2012

ஈவ் டீசிங் செய்தால் கடும் நடவடிக்கை: சீர்காழி டி.எஸ்.பி. எச்சரிக்கை

சீர்காழியில் விவேகானந்தா மகளிர் கல்லூரியில் சீர்காழி காவல்துறை சார்பில் ராகிங்கை முற்றிலும் ஒழிக்கும் வகையில் புகார் பெட்டிகள் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
 
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். டி.எஸ்பி பாலகுரு,மகளிர் இன்ஸ்பெக்டர் சுகுணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் ஜெயந்தி கிருஷ்ணா வரவேற்று பேசினார். இதில் சீர்காழி டி.எஸ்.பி பாலகுரு புகார் பெட்டியை பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பேசியதாவது:-
 
இங்கு வைக்கப்படுள்ள புகார் பெட்டியை கல்லூரி மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.மாணவிகள் கல்லூரிக்கு வரும்போதோ அல்லது பஸ் நிலையத்திலோ, வீட்டுக்கு அருகாமையிலோ எதாவது அநீதி இழைக்கப்பட்டாலோ அல்லது ஆண்கள் கிண்டல், கேலி செய்து தொந்தரவு செய்தால் இந்த புகார் பெட்டியில் எழுதி போடலாம். புகார் தெரிவிப்பவர்கள் தாங்கள் விருப்பப்பட்டால் பெயர், முகவரியை புகாரில் தெரிவிக்கலாம்.
 
தாழ்வு மனப்பான்மையை விட்டு பெண்கள் தைரியமாக பேச முன் வரவேண்டும். இந்திய தண்டனை சட்டத்தில் 511 பிரிவுகள் உள்ளன.எல்லா குற்ற நடவடிக்கைக்கும் தண்டனைகள் உண்டு. ஈவ்டீசிங் செய்பவர்களுக்கு 3முதல் 5 ஆண்டுகள் வரை அபராதத்துடன் கடுங்காவல் தண்டனை வழங்க சட்டத்தில் உள்ளது.ஆகையால் ராகிங்,டீசிங் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 
இவ்வாறு அவர் பேசினார்.
 
இதில் கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

சீர்காழியில் கட்டி முடிக்கப்பட்ட தமிழிசை மூவர் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படுமா?

சீர்காழியில் பிறந்து வளர்ந்து உலகெங்கும் தமிழிசையை வளர்த்த தமிழிசை மூவர்களான முத்துதாண்டவர், அருணாச்சலகவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகியோரின் நினைவுகளை போற்றும் வகையில் சீர்காழி தாசில்தார் அலுவலகம் எதிரில் ரூ 1 கோடியே 51 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்ட கடந்த ஆட்சியில் உத்தரவிடப்பட்டு 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மணிமண்டபம் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது.
 
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனி கவனத்தில் வித்திட்ட இந்த மணிமண்டபத்தை அப்போதைய செய்திதுறை அமைச்சர் பரிதிஇளம்வழுதி பல்வேறு வகையான கலை யுக்திகளை கையாண்டார். அதன் தொடர்ச்சியாக மணி மண்டபத்தில் வைப்பதற்காக கலை நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்ட தமிழிசை மூவர்களான முத்துதாண்டவர், அருணாச்சலகவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகியோரின் ஐம்பொன் சிலைகள் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டது.
 
ஒவ்வொரு சிலையும் 500 கிலோ எடையில் பீடம் உட்பட ஆறேமுக்கால் அடி உயரம் கொண்ட ஜம்பொன் சிலைகளால் அலங்கரிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ 21 லட்சம் ஆகும். மேலும் மணிமண்டத்தின் முகப்பில் இருபக்கங்களிலும் பெரியளவிலான இரண்டு கல் யானைகளும் அதன் மேல் பண்ணும், பரதமும், விரலியார் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது.
 
ஆரம்ப கால கட்டத்தில் அசுர வேகத்தில் தொடங்கிய மணிமண்டபத்தின் சிற்ப வேலைகள் சற்று தாமதமாகவே நடந்து முடிக்கப்பட்டுள்ளது என தமிழ் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். திமுக ஆட்சி காலத்திலேயே மணிமண்டபம் கட்டி திறக்கப்பட வேண்டுமென்பது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு திட்டத்தில் ஓன்றாகும். அதன்படி சீர்காழியில் ஆண்டு தோறும் அரசு சார்பில் நடத்தப்படும் தமிழிசை மூவர் விழா கடந்த ஆண்டு புதிய மணிமண்டபத்தில் தலைசிறந்த கலைஞர்களை கொண்டு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால் இந்த மணிமண்டபம் காலதாமதாமாக பணிநிறைவு பெற்றும் திறப்பு விழா காணமுடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்களை மனவேதனை அடைய செய்துள்ளது. இது குறித்து தமிழ் ஆர்வலர் ஒருவர் கூறுகையில் : உலகெங்கும் தமிழிசையை வளர்த்த முத்துதாண்டவர், அருணாச்சலகவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகிய தமிழிசை மூவர்களுக்கு மணிமண்டபம் மாளிகை கட்டி திறப்பு விழா செய்யாமல் இருப்பது வருந்ததக்க விஷயமாகும்.
 
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பல்வேறு இன்னல்கள் பட்டு தமிழிசையை வளர்த்த மூவர்களுக்கும் மணிமண்டபம் அவசியமான ஓன்று. அவர்களின் நினைவு களை இந்த மண்டபத்தில் ஆண்டுதோறும் போற்றிப் பாடி உலகலவில் உயர்த்திட நாம் ஓற்றுமையுடன் இணைந்து செயலாற்றிட வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் சென்னை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலையை புதுப்பித்து சலவை கற்கள் அமைத்து சீரமைக்கவும், கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தை புனரமைக்கவும் பல லட்சம் நிதி ஓதுக்கீடு செய்துள்ளார்.
 
இதேபோல் சீர்காழியில் ரூ 1 கோடியே 51 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட தமிழிசை மூவர் மணிமண்டபத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றார்.