நண்பர்களே !மாதம் 9ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈஸியா

Thursday, January 26, 2012

சீர்காழி அருகே வாய்பேச முடியாத பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர்கள்

சீர்காழி, ஜன. 17-
 
சீர்காழி அருகே உள்ள திருக்கருக்காவூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராதிகா (வயது 26, பெயர் மாற்றப்பட்டுள்ளது). வாய் பேச முடியாதவர். நேற்று மாலை அப்பகுதியில் உள்ள காட்டில் விறகு பொறுக்க ரேணுகா சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் வினோத் (26), பாலாஜி (27). வடகால் செந்தில் (25). ஆகிய 3 பேரும் மது குடித்து கொண்டு இருந்தனர்.  
 
போதை தலைக்கேறிய அந்த வாலிபர்கள் விறகு பொறுக்கி கொண்டு இருந்த ராதிகாவிடம் சென்று தகராறு செய்தனர். பின்னர் அவரை பலவந்தமாக கையை பிடித்து இழுத்தனர். அவர்களின் பிடியில் இருந்து ராதிகா தப்ப முயன்றார். ஆனால் அந்த 3 வாலிபர்களும் ராதிகாவை குண்டுகட்டாக தூக்கி, மறைவான இடத்துக்கு சென்று கற்பழிக்க முயன்றனர்.
 
வாய்பேச முடியாத பெண் என்பதால், ராதிகா சத்தம் போட முடியாமல் அந்த வாலிபர்களை கைகளால் தாக்கினார். அப்போது அந்த வழியாக சிலர் இதை பார்த்து ஓடிவந்தனர் அதற்குள் அந்த போதை வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
 
தலையில் பலத்த காய மடைந்த ரேணுகாவை சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து ராதிகாவின் தாய் பானுமதி சீர்காழி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கற்பழிக்க முயன்ற 3 வாலிபர்களையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

தரங்கம்பாடி அருகே குதிரை-மாட்டு வண்டி பந்தையம்

தரங்கம்பாடி, ஜன. 18-
 
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் ஆண்டு தோறும் தில்லையாடி உத்திராபதி யார் 37-ம் ஆண்டு மற்றும் நாராயணசாமியின் நினைவாக குதிரை மற்றும் மாட்டு வண்டி பந்தையம் நடைபெற்றது. திருக்கடையூர் ஊராட்சி மன்றத் தலைவர் எழில்நம்பி தலைமையில், முன்னாள் ஒன்றிய குழு துணைத்தலைவர் பெருமாள் விழாவை துவக்கிவைத்தார்.
 
மார்க் சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் ஒன்றிய செயலாளர் சிம்சன் வரவேற்றார். அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் கலியபெருமாள், மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் அமிர்த விஜயகுமார், கமலாசங்கர், கலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
மாட்டு வண்டி போட்டியை பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் சிறிய மாடு, நடு மாடு, பெரியமாடு என நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளும், 30-க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகளும் கலந்து கொண்டன.
 
இந்த போட்டியை காண உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமானோர் திரண்டனர். திருக்கடையூரிலிருந்து தரங்கம்பாடி வரை சாலையின் இருபுறமும் மக்கள் குவிந்திருந்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் ரெத்தினசாமி, சீர்காழி டி.எஸ்.பி. நவநீத கிருஷ்ணன், தரங்கை தாசில்தார் சூரிய மூர்த்தி, பொரையார் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ சேகர், தரங்கை பேரூராட்சி தலைவர் கிருஷ்ணசாமி, ஊராட்சி மன்றத்தலைவர்கள் சுந்தரவடிவேலு, அண்ணாதுரை, நடராஜன், கோவிந்தசாமி செல்வராணி பொன்னுக்குட்டி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
போட்டியில் வெற்றி பெற்ற மாடு, குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு எம்.எல்.ஏ. பவுன்ராஜ், மயிலாடுதுறை எம்.பி. ஓ.எஸ்.மணியன், மாவட்ட கவுன்சிலர் ஞானவேலன், கோகுலபிரசாத், முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் நிவேதாமுருகன், திருக்கடையூர் ஒன்றிய கவுன்சிலர் எஸ். மாறன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். முடிவில் இவ்விழா நிர்வாகி பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Sunday, January 8, 2012

சீர்காழியை தாக்கிய தானே புயலின் கோர தண்டவ காட்சிகள்








சீர்காழி அருகே பரபரப்பு: கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் பலி; மற்றொரு மாணவரை தேடும் பணி தீவிரம்

சீர்காழி, ஜன. 4-
 
கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாரியப்பா நகரை சேர்ந்தவர் பாலு மகன் செல்வகணபதி (வயது 19). சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் பி.சி.ஏ. படித்து வருகிறார். சிதம்பரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதவன் மகன் வினோத்குமார் (19). இவர் கடலூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் பி.ஈ. படித்து வருகிறார். மேலும் அவர்களது நண்பர்கள் விக்னேஷ் (27), அருண் (22), சந்தோஷ்குமார் (22). இவர்கள் கடலூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் பி.ஈ. படித்து வருகிறார்கள்.
 
இந்நிலையில் நேற்று மாலை 5 பேரும் நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் ரெயில்வே தண்டவாளத்தின் கீழ் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது செல்வகணபதி, வினோத்குமார் ஆகியோரை ஆற்றுநீர் இழுத்து சென்றது.
 
இதை பார்த்த மற்ற நண்பர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றும் முடியாமல் போனது. உடன் சத்தம் போட்டு அருகில் உள்ளவர்களை அழைத்தனர் எனினும் செல்வகணபதி, வினோத்குமார் இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.
 
இதுபற்றி கொள்ளிடம் போலீஸ் நிலையம், சீர்காழி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப்-இனஸ்பெக்டர் செல்வி, தீயணைப்பு நிலைய அலுவலர் மருதப்பன் தலைமையில் குழுவினர் ரப்பர் படகு மூலம் விடிய, விடிய தேடினர். ஆனாலும் அவர்களை கண்டுபிடிக்க முடிய வில்லை.
 
கொள்ளிடம் பகுதியில் புயல் சேதங்களை ஆய்வு செய்து கொண்டிருந்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயபால், கலெக்டர் முனுசாமி, எம்.எல்.ஏ. சக்தி ஆகியோரும் கொள்ளிடம் ஆற்றில் கல்லூரி மாணவர்கள் முழ்கிய தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்றனர்.
 
பின்னர் தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் உதவியுடன் மாணவர்களை தேட உத்தரவிட்டனர். மேலும் தண்ணீரில் மூழ்கிய மாணவர்களின் பெற்றோர்களிடம் ஆறுதல் கூறினர்.இன்று காலை 9 மணிய ளவில் அருகில் உள்ள சேற்றில் என்ஜினீயரிங் மாணவர் வினோத்குமார் உடல் சிக்கியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மற்றொரு மாணவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

சீர்காழி அருகே மாமியார் கண்டித்ததால் மருமகள் தற்கொலை

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வழுதலைகுடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் செந்தில்குமார். பி.எஸ்.என்.எல். ஊழியர். அவரது மனைவி விஜயராணி. (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. 3 மகன்கள் உள்ளனர். நேற்று விஜயராணியை மாமியார் கண்டித்தார். இதனார் மனமுடைந்த விஜயராணி தற்கொலை செய்வது என தீர்மானித்தார்.
 
அதன்படி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஜயராணி தனது உடலில் மண்எண்ணை எடுத்து ஊற்றி தீ வைத்து கொண்டார். உடல் கருகிய அவர் வேதனையால் அலறி துடித்தார்.
 
சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். உடல் கருகிய விஜயராணியை தூக்கி கொண்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.  
 
இதுகுறித்து சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.