நண்பர்களே !மாதம் 9ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈஸியா

Monday, February 27, 2012

சீர்காழி அருகே ரெயிலில் அடிபட்டு புதுமாப்பிள்ளை பலி

சீர்காழி, பிப். 21-
 
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் சரகம் குமாரநத்தம் மேல தெருவை சேர்ந்தவர் கணபதி. அவரது மகன் கருணாகரன். (வயது 27). இவருக்கும் ரேவதி என்ற பெண்ணுக்கும் கடந்த 8 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது.
 
இன்று காலை கருணாகரன் மருவத்தூர் ரெயில்வே தண்டவாளம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் கருணாகரன் மீது மோதியது.இதில் அவர் உடல் துண்டாகி பலியானார்.
 
இதுகுறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். கருணாகரன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தாரா? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனியார் அனல்மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு: வீடுகளில் கருப்பு கொடி கட்டி மீனவ கிராம மக்கள் போராட்டம்- சீர்காழி அருகே பரபரப்பு

சீர்காழி, பிப். 22-
தனியார் அனல் மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவ கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் பகுதியில் தனியார் அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
 
மேலும் இதற்காக விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளும் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த பகுதியில் அனல் மின்நிலையம் அமைத்தால் விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.
 
இதற்கிடையே கடந்த வாரம் நாகை கலெக்டர் முனுசாமி தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.கூட்டத்திலும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இந்நிலையில் பெருந்தோட்டம் அருகேயுள்ள சாவடி குப்பம் மீனவ கிராமத்தில், 300-க்கும் மேற்பட்ட வீடுகளில், அனல் மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.
 
மேலும் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மீனவ கிராம மக்களின் திடீர் போராட்டத்தால் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை அருகே பரிதாபம்: மனைவியை மிரட்ட முயன்ற கணவர் தீயில் கருகி சாவு

நாகை, பிப். 27-
நாகை அருகே மனைவியை மிரட்ட முயன்ற கணவர் தீயில் கருகி இறந்தார்.   நாகை அருகே உள்ள வள்ளிவலம் போலீஸ் சரகம் கொட்டன் குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி சந்திரா. 2-வது மனைவி இந்திரா. இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக ஜெயபால் தனது மனைவியிடம் அடிக்கடி குடிப்பதற்கு பணம் கேட்டு நச்சரித்து வந்தார்.
 
நேற்றும் பணம் கேட்டு தொந்தரவு செய்தார். ஆனால் சந்திரா பணம் கொடுக்கவில்லை. ஆத்திரம் அடைந்த ஜெயபால் தனது மனைவியை மிரட்டுவதற்கு உடலில் தீ வைத்தார். இதில் உடல் கருகிய அவர் வேதனையால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.
 
உடல் கருகிய ஜெயபாலை தூக்கி கொண்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.   இதுகுறித்து வள்ளிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Wednesday, February 15, 2012

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் இன்று கடைகள் அடைப்பு: மின்வெட்டை கண்டித்து போராட்டம்

சீர்காழி, பிப். 15-

சீர்காழி அருகே உள்ளது வைத்தீஸ்வரன் கோவில். இங்கு புகழ் பெற்ற சிவன் கோவிலான வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. மேலும் இந்த கோவிலில் உள்ளே செவ்வாய் தோஷ பரிகார தலமும் உள்ளது. இதனால் இங்கு வெளியூர்களில் இருந்து தினசரி ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

இந்த பகுதியில் தினமும் சுமார் 10 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுவதாக இந்த பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந் நிலையில் மின்வெட்டை கண்டித்து இன்று வைத்தீஸ்வரன் கோவிலில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இதனால் வைத்தீஸ்வரன் கோவில் வடக்கு, மேல ரதவீதி, கடைவீதி, பட்டவர்த்தி ரோடு பகுதிகளில் உள்ள சுமார் 150 கடைகள் மூடப்பட்டு இருந்தன. சில கடைகள் மட்டும் திறந்து இருந்தன.

இந்த கடை அடைப்பால் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்த வெளியூர் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளானர்கள். மேலும் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடைபெறுவதாக இந்த பகுதி வியாபாரிகளின் குற்றம் சாட்டி உள்ளனர்.

விவசாயிகளின் நெல் மூட்டைக்கு கொள்முதலில் முக்கியத்துவம் தராமல் வியாபாரிகளின் நெல் மூட்டைக்கு முக்கியத்துவம் கொடுத்து கொள்முதல் செய்யப்படுவதாகவும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறினர். எனவே இந்த குறையை களைய கோரியும் நெல் மூட்டைக்கு கூடுதலாக ரூ.20 வழங்க வற்புறுத்தியும் இந்த கடை அடைப்பு நடந்தது.

சீர்காழி அருகே வாடகை ஜெனரேட்டர் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர்

சீர்காழி அருகே வாடகை ஜெனரேட்டர் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர்
சீர்காழி, பிப்.14-
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் புகழ் பெற்ற கோயில் ஸ்தலமாகும். இவ்வூரில் சுமார் 6 ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். 15 வார்டுகளை உள்ளடக்கிய வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் சுமார் 10 வார்டுகளின் பொது மக்களுக்கு குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் 600 வீடுகளுக்கு நேரடி குடிநீர் இணைப்பும், 300க்கும் மேற்பட்ட பொது குடிநீர் மையங்களின் மூலமாகவும் நாள்தோறும் காலை, மாலை என் இருவேலைகளிலும் பொதுமக்களுக்கு ஏற்ற நேரத்தில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வரும் மின்வெட்டால் இப்பகுதியில் குடிநீர் விநியோகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. தினசரி 10மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப் படுவதால் பொதுமக்களின் அன்றாட தேவைக்கேற்ப குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், சரியான குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல இயலாதநிலை உருவாகியது. இந்த சூழ்நிலை வைத்தீஸ்வரன்கோயில் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலிங்கம் தலைமையில், துணை தலைவர் போகர்ரவி முன்னிலையில் அவசர ஆலோசனை செய்து வாடகை ஜெனரேட்டர் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றி பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய முடிவு செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி ரெயில்வே ரோட்டில் அமைந்துள்ள பூங்காவில் அதிகதிறன் கொண்ட ஜெனரேட்டர் மூலம் நீரேற்றத்தை தொடங்கி வைத்தனர். இதன் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழக்கம் போல் விநியோக்கப்படும் என தலைவர் ராமலிங்கம், துணை தலைவர் போகர்ரவி தெரிவித்தனர். நகர துணை செயலாளர் சுகுமார், கவுன்சிலர்கள் தேவா, ரவி மற்றும் பலர் உடனிருந்தனர்.

நாகை அருகே இளம்பெண்ணை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்த வாலிபர்

நாகை, பிப் 12-
 
நாகை அருகே உள்ள திட்டசேரியை சேர்ந்தவர் முருகையன். அவரது மகள் மாதவி(வயது 19). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் பிரபு என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதல் வயப்பட்டனர்.காதல் வானில் சிறகடித்து பறந்த அவர்கள் அடிக்கடி உல்லாசம் அனுபவித்தனர்.
 
இதனால் மாதவி 3 மாதம் கர்ப்பம் ஆனார். அதிர்ச்சி அடைந்த அவர் தனது காதலனிடம் திருமணம் செய்யுமாறு கூறினார். ஆனால் பிரபு மறுத்து விட்டார்.   பதறி போன மாதவி இதுகுறித்து நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
 
புகார் மனுவில் என்னை காதலித்து கர்ப்பமாக்கிய பிரபு, உடந்தையாக இருந்த அவரது தாய் தேவிகா, அக்காள் பிரவீணா ஆகியோர் மீது நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

சீர்காழியில் கடைக்காரரிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய ரவுடி: பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு

சீர்காழி,பிப்.8-
சீர்காழியில் கடைக்காரரிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய ரவுடியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.   சீர்காழி அருகேயுள்ள தாடாளன் காமராஜர்புரம் பகுதியை சேர்ந்தவர் வினோத்(வயது25).இவர் மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் வினோத் சம்பவத்தன்று சீர்காழி புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார்.அப்போது அங்கு இட்லி கடை நடத்தி வரும் சம்பந்தம்(30) என்பவரது கடைக்கு சென்றார்.   திடீரென கத்தியை காட்டி பணம் கேட்டு சம்பந்தத்தை,வினோத் மிரட்ட தொடங்கினார். இதனால் அதிர்ச்சிடைந்த சம்பந்தம் சத்தம் போட தொடங்கினார். உடனே அருகில் நின்ற பொது மக்கள் ரவுடி வினோத்தை விரட்டி சென்று பிடித்தனர்.
பின்னர் அவரை சீர்காழி போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து , பிடிபட்ட வினோத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செம்பனார்கோவிலில் தோழி தாக்கியதில் பிளஸ்-1 மாணவி காயம்: போலீசார் விசாரணை

தரங்கம்பாடி,பிப்.7-
செம்பனார்கோவிலில் தோழி தாக்கியதில் காயமடைந்த பிளஸ்-2 மாணவி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.   நாகை மாவட்டம் செம்பனார் கோவிலை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மகள் மூகாம்பிகை (வயது15).
 
இவர் அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அதே வகுப்பில் படிப்பவர் நிவேதிதா. இருவரும் தோழிகள். கணக்கு பாடத்தில் மூகாம்பிகை குறைவான மார்க் எடுத்ததால் நிவேதிதா அவரை தலையில் குட்டி உள்ளார். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. விளையாட்டாக ஆரம்பித்த சண்டை கைகலப்பாக மாறியது.
 
இதில் மூகாம்பிக்கை கழுத்தில் காயம் ஏற்பட்டது. மயிலாடுதுறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்ற மூகாம்பிகை அதன் பிறகு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார்.
 
இந்த சம்பவம் பற்றி மூகாம்பிகை தந்தை வெற்றி வேல் செம்பனார் கோவில் போலீசில் புகார் செய்தார். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து நிவேதிதாவிடம் விசாரணை நடத்தினார்கள்

வேளாங்கண்ணியில் பயங்கரம்- இளம் பெண்ணை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: கணவர் உள்பட 3 பேர் கைது

நாகை, பிப். 6-
வேளாங்கண்ணியில் இளம்பெண்ணை உயிரோடு எரித்து கொல்ல முயன்ற கணவர் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.   நாகை மாவட்டம் வேளாங்கண்ணி போலீஸ் சரகம் செம்பியன் மகாதேவி மெயின் ரோட்டை சேர்ந்தவர் இளையராஜா. (வயது 32). அவரது மனைவி சித்ரா. (26). இவர்கள் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.
 
நேற்று இரவு சித்ரா வீட்டில் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். உயிருக்கு போராடிய சித்ராவை தூக்கி கொண்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்டுகிறது.
 
 இதுகுறித்து சித்ரா நாகை மாவட்ட நடுவர் நீதிமன்ற நீதிபதி கோதண்டராமனின் மரண வாக்கு மூலம் கொடுத்து உள்ளார். அவர் கூறியதாவது:-
 
என்னை எனது மாமியார் பார்வதி, மாமனார் சின்னத்தம்பி, கணவர் இளையராஜா ஆகியோர் எனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்தனர். இதற்கு உடந்தையாக கணவரின் தம்பி கார்த்திக்கேயன், அவரது மனைவி அனிதா ஆகியோர் இருந்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.  
 
வேளாங்கண்ணி போலீசார் 5 பேர் வழக்கு பதிவு செய்தனர். இதில் இளையராஜா, அனிதா, சின்னதம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Sunday, February 5, 2012

சீர்காழி அருகே லாரி மீது மோதல்: போலீஸ்காரர் பலி

சீர்காழி, பிப். 4-

திருவாரூர் அருகே உள்ள திருமருகல் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். (வயது 50). திருவாரூர் போலீஸ் கட்டுப்பாடு அறையில் போலீஸ்காரராக பணியாற்று வந்தார். அவரது மனைவி விஜயராணி. இவர்களது மகன் திவாகர். நாகையில் போலீஸ்காரராக உள்ளார்.

நேற்று காலை தனது மகன்ங திவாகருக்கு புது மோட்டார் சைக்கிள் வாங்கு புதுச்சேரி சென்றார். அங்கு பைக் வாங்கி விட்டு ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார். சீர்காழி அருகே கோவில் பத்து என்ற இடத்தில் சென்ற போது சாலை ஓரம் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் கல்யாணசுந்தரத்துக்கு தலையில் அடிபட்டது. அவர் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகையில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

நாகை, பிப். 5-
 
நாகையில் கடற் சீற்றத்தால் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.   நாகை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கடந்த 2 நாட்களாக கடல் சீற்றம் அதிகம் காணப்படுகிறது.
 
காற்றின் வேகம் அதிகரித்து இருப்பதால் கடலில் எழும்பும் ராட்சத அலைகள் கரையை முட்டி மோதுகின்றன. தொடர்ந்து காற்று வேகமாக வீசியதால் இன்று மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. சுமார் 1000-க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.  
 
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில் நடுக்கடலில் மீன்பிடிக்கும் போது காற்றின் வேகம் நேரம் ஆக ஆக அதிகரித்து கொண்டே இருந்தது. இதனால் எங்களால் மீன்பிடிக்க முடியவில்லை என்றனர்.

Thursday, February 2, 2012

தமிழர்களின் உரிமைகள் ம.தி.மு.க.வினால் மீட்கப்படும்: நாஞ்சில் சம்பத் பேச்சு

குத்தாலம், பிப்.2-
குத்தாலம் அருகே பழையகூடலூரில் ம.தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது. விழாவிற்கு நாகை மாவட்ட செயலாளர் குத்தாலம் ஏ.எஸ். மோகன் தலைமை தாங்கினார். குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேற்கு ஒன்றியச் செயலாளர் வாசு வரவேற்று பேசினார்.
ம.தி.மு.க. கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு, கட்சி கொடியேற்றி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழர்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் மொழி இந்தி, இறை மொழி சமஸ்கிருதம், இசை மொழி கன்னடம், தெலுங்கு என்று உருவாக்கப்பட்டு தொண்மையான தமிழ் மொழியின் உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டன.
தமிழர்களின் நிலப்பரப்பான திருப்பதி, காளகஸ்தி, திருவனந்தபுரம், தேவிக்குளம், பீர்மேடு என்று பல்வேறு பகுதிகள் நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டன. இதனால் தமிழர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.இதனை மீட்க வேண்டும். தமிழ் மொழியின் மீட்சிக்கு மட்டுமல்லாமல் தமிழர்களின் நிலத்தையும் மீட்க விரைவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் போராட்டம் நடத்த உள்ளார். கண்டிப்பாக தமிழர்களின் உரிமைகள் ம.தி.மு.க.வினால் மீட்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கட்சி துணை பொதுச் செயலாளர் துரை. பாலகிருஷ்ணன் கல்வெட்டை திறந்து வைத்தார். விழாவில் மாநில கொள்ளை விளக்க அணி துணை செயலாளர் என்.எஸ். அழகிரி, முன்னாள் ஒன்றிய பெருந் தலைவர் தங்கையன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கோமல் கிட்டு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், கிளை நிர்வாகிகள் சின்ன துரை, குமரவேல், கோவிந்தராஜ், சாமிநாதன், தர்மராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஊராட்சி செயலாளர் கிருபானந்தம் நன்றி கூறினார்.இதேபோல் மயிலாடுதுறையில் நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்திற்கு சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் நகர, மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். மார்க் கெட் கணேசன் வரவேற்று பேசினார். அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பி னர் மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் நகரச் செயலாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் இல்லை: நகரசபை கூட்டத்தில் புகார்

சீர்காழி,பிப்.1-

சீர்காழி நகராட்சியின் சாதாரணக் கூட்டம் தலைவர் இறைஎழில் தலைமையில் மன்ற் கூடத்தில் நடந்தது. ஆணையர் ஸ்ரீதரன், துணை தலைவர் தமிழ் செல்வம், மேலாளர் சிவசங்கரன், நகரமைப்பு ஆய்வர் கல்யாணரங்கன் மற்றும் அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். எழுத்தர் ஆனந்தராஜ் தீர்மானங்களை படித்தார்.

சுப்புராயன் : நகராட்சியில் அனுமதி பெறாமல் விற்பனை செய்யப்பட்ட மனை பிரிவுகளில் பலர் வீடுகள் கட்டியுள்ளனர். இதற்கு நகராட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.

பாலமுருகன் : 4வது வார்டு ஈசானியத் தெருவில் 8 வார்டுகளின் சாக்கடை நீர் சங்கமிப்பதால் அதிகளவில் கொசு தொல்லை ஏற்பட்டுள்ளது. புதிய நகர் பகுதிகளில் சாக்கடை நீர் செல்லும் வழிகள் ஆக்கிரமிக்கப்பட்டு அடைக்கப்படடுள்ளது. இதனை ஆய்வு செய்து சாக்கடை நீர் தேங்காமல் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும். எரிவாயு தகன மேடை பணி எந்த நிலையில் உள்ளது.

முகமது நஜீர் : சீர்காழி அருகே விளந்திட சமுத்திரத்தில் நகராட்சி அனுமதி பெறாமல் திருமண மண்டபம் கட்டப் பட்டு வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. அதிகாரிகள் தெளிவான பதிலையும், நடவடிக்கை எடுக்கப்படாததற்கு காரணத்தையும் மன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

வேல்முருகன் : சீர்காழி அரசு தலைமை மருத்து வமனை வளாகத்தில் இரவு நேரத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால் பல்வேறு தவறுகள் நடைபெறுகிறது. அவசரத் தேவைக்கு குடிநீர் இல்லை உடன் சரிசெய்ய வேண்டும். நகரில் வாடிக்கையாளர்களுக்கு முறையாக சிலிண்டர்கள் வழங்கப்படுதில்லை. காலதாமத்தை சரிசெய்து உடன் சிலிண்டர்கள் வழங்க வேண்டும்.

சாந்திசரவணன்: ரயிலடி தெருவில் 4 வார்டுகளின் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஈமச்சடங்கு மண்டபம் அமைத்திட வேண்டும்.

விஜயக்குமார் : 2வது வார்டில் எம்.எஸ்.கே, ஸ்ரீநகர்களில் மின் கம்பங்கள் அமைப்பதற்கு மின்வாரியத்திடம் உரிய பணம் செலுத்தியும் மின் கம்பங்கள் நடப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

திருச்செல்வன்: திட்டை ரோட்டில் ஏற்கனவே இருந்த இரண்டு அடிப்பம்புகளை அமைத்து தர கோரி பலமுறை மன்றத்தில் தெரிவித்தும் நடைபெறவில்லை. மன்றத்தில் குறைகளை பேசுவதை ஏற்றுக் கொண்டு செய்யமாடீர்களா? ஓவ்வொன்றுக்கும் தனித்தனியாக மனு கொடுத்தால் தான் செய்வீர்களா?

மாரிமுத்து : சிங்கார தோப்பு தெருவில் மின் கம்பங்கள் அமைத்து அப்பகுதியில் இருளை போக்க வேண்டும். கீழ்த்தெருவில் தார் சாலை அமைக்க டெண்டர்விட்டு ஒரு வருடமாகியும் இதுவரை பணிகள் நடைபெறவில்லை. உடன் தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவப்பிரியா சீர்காழியில் உள்ள பள்ளிகளில் கழிப்பிடங்கள் சுகாதாமற்ற நிலையில் உள்ளது. இதனால் மாணவ, மாணவிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. நகராட்சியின் சுகாதார பரிவினர் நகரில் உள்ள பள்ளிகளில் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப் படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும்.

அம்பிகா பக்கிரிசாமி : 8வது வார்டு வாய்க்காங்கரை தெருவில் கழிவுநீர்கள் வடிகால்களை முறையாக தூர்வார வேண்டும்.

ராஜேஷ்: புழுகாப்பேட்டை பிள்ளையார் கோயில் அருகே வேகத்தை அமைக்க வேண்டும். எரியாத மின்விளக்குகளை சரிசெய்ய நகராட்சி ஊழியர்களிடம் தெரிவித்தும் பலன் இல்லை. புகார் செய்த ஓரிரு நாட்களிலியே சரி செய்தால் தான் நகராட்சிக்கும் நகர்மன்ற உறுப்பினர்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

தலைவர் இறைஎழில் : அரசு வழங்கும் அனைத்து நலதிட்டங்களும், நிவாரணங்களும் நகரில் உள்ள 24 வார்டுகளுக்கும் முறையாக கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மண்ணெண்னை பற்றாக்குறையை போக்க அரசு துரிதநவடிக்கை எடுக்க மன்றத்தின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.