நண்பர்களே !மாதம் 9ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈஸியா

Wednesday, May 23, 2012

பிளஸ் - 2 தேர்வில் மகள் தேர்ச்சி-தந்தை தோல்வி

சீர்காழி, மே. 23-

சிர்காழியை அடுத்துள்ள வேட்டங்குடியை சேர்ந்தவர் மாரிமுத்து. நெடுஞ்சாலைத் துறையில் சாலைப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சுபஸ்ரீ தேவி. இவர் சீர்காழி சியாமளா பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்- 2 படித்தார்.

அதே பள்ளியில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதினார். சுபஸ்ரீ தேவியின் தந்தை மாரிமுத்துவும் தனியாக பிளஸ் - 2 தேர்வு எழுதினார். மயிலாடுதுறை செயின்ட் பால் பள்ளி தேர்வு மையத்தில் இந்த தேர்வு நடைபெற்றது.

நேற்று பிளஸ் - 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதும் சுபஸ்ரீதேவியும், அவரது தந்தை மாரிமுத்துவும் இண்டர் நெட் சென்டருக்கு ரிசல்ட் பார்க்க சென்றனர். இதில் சுபஸ்ரீ தேவி மட்டுமே தேர்ச்சி பெற்று இருந்தார். அவர் 869 மதிப்பெண்கள் பெற்றார்.

அவரது தந்தை மாரிமுத்து தமிழ் பாடத்தில் மட்டுமே தேர்ச்சி பெற்றார்.அதில் 78 மதிப்பெண் பெற்று இருந்தார். மற்ற பாடங்களில் தோல்வி அடைந்தார். ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. வருகிற அக்டோபர் மாதம் மீண்டும் தேர்வு எழுத உள்ளதாக மாரிமுத்து தெரிவித்தார்.

சீர்காழி அருகே காண்டிராக்டர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

சீர்காழி, மே.13-
 
சீர்காழி அருகே உள்ள தென்பாவி எம்.கே.கே. நகரில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். காண்டிராக்டர். குடிநீர் வடிகால் வாரிய பணிகளை காண்டிராக்டு எடுத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு தனது காரில் மனைவி வசுமதி, தாய் பாஞ்சாலி, அண்ணன் ராமலிங்கம் ஆகியோருடன் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றார்.
 
இரவு 9 மணியளவில் வீடு திரும்பினார்கள். அப்போது வீட்டின் முன் பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த 4 பீராவும் திறந்து இருந்தது. பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி காணப்பட்டது. அதில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை, ரூ. 40 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போய் இருந்தது.
 
இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 3 லட்சம் ஆகும். பட்டப்பகலில் இக்கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. காண்டிராக்டர் கோவிந்த ராஜ் கோவிலுக்கு செல்வதை நோட்டமிட்ட கொள்ளைக் கும்பல் வீட்டின் கதவை உடைத்து கை வரிசையை காட்டி இருக்கிறது. இது குறித்து சீர்காழி போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் கிடைத்ததும் சீர்காழி டி.எஸ்.பி. நவநீத கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
 
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளை யர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். இக்கொள்ளை சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.