நண்பர்களே !மாதம் 9ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈஸியா

Wednesday, July 25, 2012

சீர்காழியில் சீட்டு கம்பெனி நடத்தி ரூ.15 கோடி மோசடி

சீர்காழி,ஜூலை.21-
 
சீர்காழி தென்பாதி வி.என்.எஸ் நகரில் வசித்து வருபவர் நந்தக்குமார் (வயது 55), தேர் வடக்கு வீதியை சேர்ந்தவர் முரளிக்கிருஷ்ணன் ஆகிய இருவரும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சீர்காழியில் கனகதாரா சிட்பண்ட் என்ற பெயரில் சீட்டு கம்பெனி நடத்தி வந்தனர்.
 
இந்தநிலையில் திடீரென அவர்கள் தலைமறைவாகி விட்டனர். இதனால் பணம் கட்டியவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் சீர்காழி போலீசில் புகார் கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
 
கனகதாரா சிட்பண்ட் நிறுவனத்தில் சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் சேமிப்பு முதலீடு, ஏலச்சீட்டு, ஆகியவற்றில் சேர்ந்து பணம் செலுத்தி வந்தோம். இந்நிலையில் கடந்த இரண்டு மாதமாக ஏலச்சீட்டு முடிந்தவர்களுக்கும், வைப்பு தொகை கொடுத்தவர்களுக்கும் பணம் தராமல் அலைகழிக்கப்பட்டனர்.
 
பணம் கொடுக்குமாறும் பலமுறை கேட்டும் ஏமாற்றமாட்டோம் பணத்தை கொடுத்து விடுகிறோம் என்று கூறினர்.தொடர்ந்து பாதிக்கப்பட்ட நாங்கள் பணம் கேட்கும் போது எங்களது அசையும், அசையா சொத்துக்களை விற்று அனைவருக்கும் பணம் தந்து விடுவதாக சொல்லி இதுவரை பணம் பட்டுவாடா செய்யவில்லை.
 
இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக மேற்படி சீட்டு நடத்தி வந்த இருவரும் குடும்பத்துடன் தலைமறைவாக உள்ளனர். தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது இரண்டு நாட்களின் வந்து விடுவோம் என்று கூறி பலரிடமும் வாங்கிய பல லட்சம் வழங்காமல் எங்களை ஏமாற்றி கொண்டிருக்கின்றனர்.
 
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இவ்வாறு அந்த புகார் மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
புகாரை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்தனர். இதனால் மேற்படி சீட்டு கம்பெனியில் பணம் செலுத்தியவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
இந்த சீட்டு கம்பெனி மோசடியில் வியாபாரிகள், வக்கீல்கள், மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் பணம் கட்டி பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் ரூ.15 கோடி வரை மோசடி நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் சீர்காழியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சீட்டு கம்பெனியில் பணம் கட்டி ஏமாந்த சீர்காழி தக்காஸ் பகுதியை சேர்ந்த வரதராஜன் கூறியதாவது:-
 
கடந்த 20 ஆண்டுகளாக இந்த சீட்டு கம்பெனி இயங்கி வருகிறது. ஆரம்ப காலத்தில் பணம் கட்டியவர்களுக்கு சரியான முறையில் வட்டி கொடுத்தனர். இதனை நம்பி ஏராளமானோர் பணம் கட்ட தொடங்கினார்கள். டாக்டர்கள், தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள் என முக்கிய பிரமுகர்களும் இங்கு பணம் கட்டி உள்ளனர்.
 
நான் கடந்த 2010 - ம் ஆண்டு முதல் பணம் கட்டி உள்ளேன். ரூ. 1 லட்சத்து 97 ஆயிரம் வரை பணம் கட்டி உள்ளேன். இது குறித்து சீட்டு கம்பெனி உரிமையாளர்களிடம் கேட்ட போது தனியார் கல்லூரியில் முதலீடு செய்துள்ளோம்.தியேட்டர் உள்ளது. பஸ் உள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறோம்.பணத்தை சரி செய்து விடுவோம் என கூறினார்கள். பணம் கிடைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
சீர்காழி சீட்டு கம்பெனியில் முக்கிய பிரமுகர்கள் ரூ. 20 லட்சம் முதல் 30 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர். அவர்கள் புகார் கொடுக்க பயப்படுகிறார்கள். வருமான வரித்துரை அதிகாரிகளுக்கு பயந்து அவர்கள் புகார் கொடுக்க மறுப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment