நண்பர்களே !மாதம் 9ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈஸியா

Wednesday, July 18, 2012

ரெட்டிக்கோடங்குடி-காடாக்குடி ஆற்றின் குறுக்கே புதிய பாலம்: சக்தி எம்.எல்.ஏ. பார்வையிட்டார்

வைத்தீஸ்வரன்கோவில் அருகே புங்கனூர் பஞ்சாயத்தில் ரெட்டிக்கோடங்குடி கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஓன்றிய தொடக்கப்பள்ளியில் அதிகபட்சமாக 15 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஏனெனில் ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.
 
இதனால் அருகில் உள்ள கிராமமான காடாக்குடியில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரம் சுற்றி கொண்டு மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டியுள்ளதால் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவிட்டது. மேலும் 2 கி.மீ தூரத்தில் உள்ள புங்கனூர் பள்ளிக்கு சென்று மாணவர்கள் படித்து வருகின்றனர். இதனிடையே ரெட்டிக்கோடங்குடி - காடாக்குடி இடையே பாப்பான்ஓடை ஆற்றின் குறுக்கே புதிய பாலம் அமைத்துக் கொடுத்தால் மாணவர்கள் குறைந்த தூரத்தில் வெகு சீக்கிரமாக பள்ளியை சென்றடைவார்கள்.
 
எனவே ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட வேண்டுமென சீர்காழி தொகுதி எம்.எல்.ஏ. சக்தியிடம் கோரிக்கை விடுத்தனர்.  இதனையடுத்து சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த சக்தி எம்.எல்.ஏ. ரெட்டிக்கோடங்குடி - காடாக்குடி இடையே புதிய பாலம் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பி வைக்குமாறு யூனியன் பொறியாளரிடம் கேட்டுக் கொண்டார். விரைவில் மாணவர்களின் நலன் கருதி பாலம் கட்டப்படும் என தெரிவித்தார்.
 
மாவட்ட ஊராட்சி தலைவர் சந்திரசேகரன், ஊராட்சிமன்ற தலைவர் மகேந்திரன், கட்சி நிர்வாகிகள் ராஜு, பாலமுருகன், ஓப்பந்தக்காரர் இளையநாதன் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment