நண்பர்களே !மாதம் 9ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈஸியா

Wednesday, July 18, 2012

சாராய வேட்டையின் போது கார் மோதி போலீஸ் ஏட்டு பலி


சீர்காழி அருகே உள்ள பாகசாலை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வந்தவர் ரவிச்சந்திரன் (40). மேலும் நடமாடும் மதுவிலக்கு சிறப்பு தனிப்படையிலும் இருந்து வந்தார்.
கடந்த 6 -ந்தேதி அதிகாலை கூத்தியம் பேட்டையில் சாராயம் கடத்தலை தடுக்க சிறப்பு தனிப்படை சப் -இன்ஸ்பெக்டர் சிங்காரம் தலைமையில் தனிப்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
இதில் ஏட்டு ரவிச்சந்திரனும் இடம் பெற்று இருந்தார். அப்போது புத்தூரில் இருந்து பழையாறு நோக்கி வந்த அம்பாசிடர் காரை நிறுத்த முயன்றனர்.
ஆனால் அந்த கார் ஏட்டு ரவிச்சந்திரன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
கார் மோதியதில் ரவிச்சந்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடல் நிலை மோசமானதை தொடர்ந்து தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்றிரவு 11. 30 மணிக்கு ரவிச்சந்திரன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கார் மோதி பலியான ஏட்டு ரவிச்சந்திரன் கடந்த 95 -ம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்தார். நாகை ஆயுதப்படையில் பணியாற்றினார். பின்னர் பாக சாலை போலீஸ் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டார்.
இவர் குடும்பத்துடன் மயிலாடுதுறை அப்துல் காதர் நகரில் வசித்து வந்தார்.
இவரது மனைவி பெயர் எழிலரசி. இவர்களுக்கு தீபிகா என்ற மகளும் ஜெனதீஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். அவர்கள் ரவிச்சந்திரன் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment