சீர்காழி ஈசானிய தெருவை சேர்ந்தவர் கதீஜாபீவி (வயது 60). இவரது மகன் யூனுஸ். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் யூனுசின் மனைவி ராபியாபீவியும் அவரது மகன் நாசர் (26), மகள் சயீராபானு (19) ஆகியோர் கதீஜாபீவியுடன் வசித்து வந்தனர். சபீராபானு அந்த பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார்.
நேற்று இரவு 7 மணியளவில் பக்கத்து வீட்டுக் காரருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ராபியா பீவியும், நாசரும் அவரை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு கையில் இருந்த பணம் மருந்து வாங்க போதுமானதாக இல்லாததால் நாசர் மட்டும் பணம் எடுப்பதற்காக வீட்டுக்கு வந்தார். வீடு பூட்டி இருந்ததால் பாட்டியையும், தங்கையும் அழைத்தார்.
ஆனால் பதில் வரவில்லை. கதவை தட்டியும் அவர்கள் கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக உள்ளே எட்டி பார்த்த நாசர் அதிர்ச்சி அடைந்தார்.
அங்கே கதீஜா பீவியும், சபீரா பானுவும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதுபற்றிய தகவல் பரவியதும் அக்கம் பக்கத்தவர்கள் அங்கு கூடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சீர்காழி போலீஸ் இன்ஸ் பெக்டர் மகேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது கதீஜாபீவியும், சபீராபானுவும் கழுத்தை அறுத்து கொடூரமாக கொல்லப்பட்டது தெரிய வந்தது. வீட்டில் இருந்த பொருட்கள், பணம் திருடப்படவில்லை.
மேலும் வீட்டில் பின் பக்க கதவு வழியாக வந்து கொலையாளிகள் பாட்டி- பேத்தியை கொன்று உள்ளனர். கைரேகை நிபுனர்கள், மோப்பநாய் மூலமும் துப்பு துலக்கப்பட்டது. இந்த கொலைக்கான காரணம் பற்றி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமர், மயிலா டுதுறை டி.எஸ்.பி. மூவேந்தன் ஆகியோர் கொலை நடந்த வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த கொலை காரணமாக அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
நேற்று இரவு 7 மணியளவில் பக்கத்து வீட்டுக் காரருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ராபியா பீவியும், நாசரும் அவரை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு கையில் இருந்த பணம் மருந்து வாங்க போதுமானதாக இல்லாததால் நாசர் மட்டும் பணம் எடுப்பதற்காக வீட்டுக்கு வந்தார். வீடு பூட்டி இருந்ததால் பாட்டியையும், தங்கையும் அழைத்தார்.
ஆனால் பதில் வரவில்லை. கதவை தட்டியும் அவர்கள் கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக உள்ளே எட்டி பார்த்த நாசர் அதிர்ச்சி அடைந்தார்.
அங்கே கதீஜா பீவியும், சபீரா பானுவும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதுபற்றிய தகவல் பரவியதும் அக்கம் பக்கத்தவர்கள் அங்கு கூடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சீர்காழி போலீஸ் இன்ஸ் பெக்டர் மகேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது கதீஜாபீவியும், சபீராபானுவும் கழுத்தை அறுத்து கொடூரமாக கொல்லப்பட்டது தெரிய வந்தது. வீட்டில் இருந்த பொருட்கள், பணம் திருடப்படவில்லை.
மேலும் வீட்டில் பின் பக்க கதவு வழியாக வந்து கொலையாளிகள் பாட்டி- பேத்தியை கொன்று உள்ளனர். கைரேகை நிபுனர்கள், மோப்பநாய் மூலமும் துப்பு துலக்கப்பட்டது. இந்த கொலைக்கான காரணம் பற்றி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமர், மயிலா டுதுறை டி.எஸ்.பி. மூவேந்தன் ஆகியோர் கொலை நடந்த வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த கொலை காரணமாக அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
No comments:
Post a Comment