நண்பர்களே !மாதம் 9ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈஸியா

Sunday, April 10, 2011

திருமுலைப்பால் -சீர்காழி



















சீர்காழி பிரமபுரீசுவர சுவாமி கோவிலில் நேற்று {10 -4 -2011 } நடந்த திருமுலைப்பால் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.சீர்காழியில் உள்ள புகழ் பெற்ற திருநிலைநாயகி உடனாகிய பிரமபுரீசுவர சுவாமி கோவிலில், பிரம்மன் பூசித்து சிவஞானம் பெற்று சாபங்கள் நீங்கப் பெற்றார். இத்தலம் முருகனின் அம்சமான திருஞானசம்பந்தர் அவதரித்த தலம்.இக்கோவிலின் பிரம்ம தீர்த்தக்கரையில், திருஞானசம்பந்தருக்கு அம்பாள் திருமுலைப்பால் வழங்கிய நிகழ்ச்சி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருமுலைப்பால் வழங்கும் விழா, நேற்று மதியம் நடந்தது.விழாவையொட்டி, திருஞானசம்பந்தர் சன்னதி மண்டபத்தில் எழுந்தருள, அங்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர் அங்கிருந்து பல்லக்கில் புறப்பட்ட திருஞானசம்பந்தர், பிரம்ம தீர்த்தக்கரையில் எழுந்தருளினார். 












































































       
                                                     

1 comment:

  1. You are doing a very good job, thanks.
    Is it possible to display lodging facilities in your town? It will be very much useful to visitors like us coming from very long distant places.

    ReplyDelete